வீட்டில் தனிமையிலிருந்த பாட்டி-தண்ணீர் பருக சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அக்கரப்பத்தனை,சின்ன நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 68 வயதுடைய வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இ சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து கடந்த 16 ஆம் திகதிஇ லிந்துலை ஹோல்றீம் தோட்டத்திஉள்ள தனது மருமகனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல்போயுள்ள நிலையில் இ நகைகளை பறிக்கும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டில் சம்பவம் இடம்பெற்றவேளைஇ எவரும் இருக்கவில்லை எனவும்இ பெண்ணின் காதுஇ கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பாரிய வெட்டு காயங்கள் காணப்பட்டன என்றும் தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள சிறுமிஇ இன்று (21)காலை தண்ணீர் பருக சென்ற வேளையில் இரத்த வெள்ளத்துடன் தனது பாட்டி கிடந்ததை அவதானித்து கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அயலவர்கள்இ லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.