கடனைத் திருப்பிச்செலுத்துவது தொடர்பில் இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.