மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதை மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலம் முழுவதும் வரி மற்றும் கட்டண உயர்வால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஓகஸ்ட் மாதம் மின் கட்டணம் 76% அதிகரிக்கப்பட்டது.
மின்கட்டண அதிகரிப்பு இந்த நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வர்த்தக சமூகத்துக்கும் பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.