யாழ்ப்பாண நகர பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற
தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் யாழ்ப்பாண நகர்ப்
பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான
பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்தவர் கையும் மெய்யுமாக
பிடிபட்டுள்ளார்
யாழ்ப்பாணம் ஜூம்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம்
ஒன்றில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை
சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்த நிலையில்,
நேற்று மாலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவினரால்
களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது மனிதப் பாவனைக்கு உதவாத நிலையில் 6,000 கிலோ கிராம்
வரையிலான பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக
நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.